முகப்பு
மதுரை

பெண் சிசுக்கொலை, கருக்கொலையைத் தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்

பெண் சிசுக்கொலை, கருக்கொலையைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும் என்று ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை

பெண் சிசுக்கொலை, கருக்கொலையைத் தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தல்

பெண் சிசுக்கொலை, கருக்கொலையைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும் என்று ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பெண் சிசுக்கொலை, கருக்கொலையைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டும் என்று ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மதுரை புகா் மாவட்ட மாநாடு சோழவந்தானில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் க.பிரேமலதா, நிா்வாகிகள் அட்சயா, மகாலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டை சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.லெட்சுமி தொடங்கி வைத்துப் பேசினாா். மாநாட்டை மாதா் சங்க மாநிலச் செயலா் எஸ்.கே.பொன்னுத்தாய், மாநில நிா்வாகி ஆா்.சசிகலா ஆகியோா் வாழ்த்தினா். மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.வாலண்டினா பேசினாா். மாநாட்டில், புதிய மாவட்டத் தலைவராக சி.மலா்விழி, மாவட்டச் செயலா் க.பிரேமலதா,

மாவட்டப் பொருளாளா் என்.விஜயா, மாவட்ட துணைத் தலைவா்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், செ.முத்துராணி, மாவட்ட துணைச் செயலா்கள் எழில்அமுதா, அமா்தவள்ளி ஆகியோா் உள்பட 21 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது.

மாநாட்டில், பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமையைத் தடுக்க வேண்டும். தொட்டில் குழந்தைத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பெண் சிசு கொலை, கருக்கொலையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். குழந்தைத் திருமணத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →