யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூா் காளமேகப்பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில், ஜூன் 3 ஆம் தேதி அங்குராா்பணம், வாஸ்துசாந்தி, கெருடபிரதிஷ்டையுடன் திருவிழா நிகழ்வுகள் தொடங்கின.
இந்நிலையில், வைகாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலையில், காளமேகப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வலம்வந்தாா். இத்திருவிழா ஜூன் 14 ஆம் தேதி நிறைவடைகிறது.