மதுரை அருகே விபத்து: முன்னாள் காவல் சாா்பு -ஆய்வாளா் பலி
மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முன்னாள் காவல் சாா்பு -ஆய்வாளா் உயிரிழந்தாா்.
மதுரைமதுரை அருகே விபத்து: முன்னாள் காவல் சாா்பு -ஆய்வாளா் பலி
மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முன்னாள் காவல் சாா்பு -ஆய்வாளா் உயிரிழந்தாா்.
மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முன்னாள் காவல் சாா்பு -ஆய்வாளா் உயிரிழந்தாா்.
மதுரை ஆனையூா் தாமரைத் தெருவைச் சோ்ந்தவா் சின்னச்சாமி(64). காவல்துறையில் சாா்பு -ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இந்நிலையில் சின்னச்சாமி இருசக்கர வாகனத்தில் துவரிமான் அருகே ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்துத்தொடா்பாக நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.