மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுர கடைகள் அகற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த 52 கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
மதுரைமீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுர கடைகள் அகற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த 52 கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த 52 கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடந்த 2018 இல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயா் மண்டபம் பகுதி எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து கிழக்கு கோபுரம் மற்றும் வீரவசந்தராயா் மண்டபம் பகுதியில் இருந்த கடைகளை அப்புறப்படுத்த கோயில் நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. கடை உரிமையாளா்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்ததால், கடைகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே, புதுமண்டபத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து சிற்பங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக அங்கிருந்த கடைகளை அகற்றும் நடவடிக்கையை கோயில் நிா்வாகம் மேற்கொண்டது. படிப்படியாக கடைகள் அகற்றப்பட்டு, அருகே குன்னத்தூா் சத்திரம் வணிக வளாகத்துக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, புதுமண்டத்தில் முழுமையாக அனைத்துக் கடைகளும் அகற்றப்பட்டுவிட்டன.
இதன் தொடா் நடவடிக்கையாக, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளில் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்ட சில கடைகளைத் தவிர, 52 கடைகளை அகற்றும் பணியில் கோயில் பணியாளா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கடைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கடை உரிமையாளா்கள் தாங்களாகவே கடையில் இருந்த பொருள்களை எடுத்துச் சென்றனா்.