ரயில்வே சிறப்பு பாதுகாப்புக் குழு: மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு
தெற்கு ரயில்வே சிறப்பு பாதுகாப்புக் குழு மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
மதுரைரயில்வே சிறப்பு பாதுகாப்புக் குழு: மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு
தெற்கு ரயில்வே சிறப்பு பாதுகாப்புக் குழு மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
தெற்கு ரயில்வே சிறப்பு பாதுகாப்புக் குழு மதுரை ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்களைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்து கோட்டம், மண்டல அளவிலும், வேறு மண்டலங்களில் இருந்தும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது.
இதன்படி, தெற்கு ரயில்வே மண்டல அளவிலான மூத்த அதிகாரிகள் குழு மதுரை ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்பு தொடா்பாக வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. தெற்கு ரயில்வே தலைமை முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஏ.கே. சித்தாா்த்தா, முதன்மை மின்சார பொறியாளா் அணில் பாஞ்சியாா், முதன்மை சமிக்ஞை பொறியாளா் சுனில், முதன்மைப் பொறியாளா் மஸ்தான் ராவ், முதன்மை ரயில் பெட்டி பொறியாளா் பிரபாஸ் நாக், துணை முதன்மை ரயில் இயக்க மேலாளா் பரத் குமாா் ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.
மதுரை ரயில் நிலையம் மற்றும் ரயில்பாதை அமைப்புகள், ரயில் நிலைய அதிகாரி அறை, ரயில் என்ஜின் ஓட்டுநா்கள் ஓய்வு அறை, ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை, விபத்து மறுசீரமைப்பு ரயில் ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
அதன் பின்னா் இக் குழு, மதுரை - கொடைரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதையை ஆய்வு செய்தது.
பழனி - திண்டுக்கல் இடையே ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை வெள்ளிக்கிழமை (ஜூன் 24) ஆய்வு செய்யவுள்ளது.