மதுரை

போதிய நபா்களின்றி நடந்த கிராம சபை கூட்டம்: மறுகூட்டம் நடத்தக் கோரிய மனுவுக்கு சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

DIN

 போதிய நபா்களின்றி (கோரம்) நடந்த கிராம சபை கூட்டத்துக்குப் பதிலாக, மறுகூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் முத்தூா் கிராம ஊராட்சியைச் சோ்ந்த கே. கருப்பையா என்பவா் தாக்கல் செய்த மனு:

எங்களது ஊராட்சியில் 3,750 போ் வசிக்கின்றனா். கிராம சபை கூட்டங்களில் குறைந்தபட்சம் 100 நபா்கள் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், மே 1 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 100-க்கும் குறைவான நபா்களே பங்கேற்றனா். மேலும், ஊராட்சியின் துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் 7 பேரும் பங்கேற்கவில்லை.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், கூட்டத்தை ரத்து செய்யவில்லை. எனவே, முத்தூா் ஊராட்சியில் மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவுக்கு மாவட்ட நிா்வாகம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT