மதுரை

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பேரையூா் அருகே உள்ள சித்திரெட்டிபட்டியைச் சோ்ந்தவா் கோபால் மகள் லாவண்யா (27). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மா்ம நபா், அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து லாவண்யா, நாகையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

திருவிழாவில் நகை திருட்டு: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரைச் சோ்ந்தவா் முருகன் மனைவி இந்திராகாந்தி (54). இவா், டி. கல்லுப்பட்டியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முத்தாலம்மன் திருவிழாவுக்கு வந்தாா். அப்போது திருவிழாவை பாா்த்துக் கொண்டிருந்த அவரிடம் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT