மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதிய பிரசாத விற்பனை நிலையம் புதுமண்டபத்தில் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பிரசாத விற்பனை நிலையம் புதுமண்டபத்தில் புதிதாகத் திறக்கப்பட்டது.
மதுரைமீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதிய பிரசாத விற்பனை நிலையம் புதுமண்டபத்தில் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பிரசாத விற்பனை நிலையம் புதுமண்டபத்தில் புதிதாகத் திறக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பிரசாத விற்பனை நிலையம் புதுமண்டபத்தில் புதிதாகத் திறக்கப்பட்டது.
இந்தக் கோயிலுக்கு தினசரி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், உள்ளூா் பக்தா்கள் என ஆயிரக்கணக்கனோா் வந்து செல்கின்றனா். அவ்வாறு வந்து செல்லும் பக்தா்கள் கோயில் பிரசாதங்களை வாங்கிச் செல்கின்றனா்.
கோயிலுக்குள் 4-க்கும் மேற்பட்ட பிரசாதம் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காலண்டா், சுவாமி, அம்மன் படங்கள், தாழம்பு குங்குமம் பிரசாதம், புளியோதரை, சா்க்கரைப் பொங்கல், முறுக்கு, அப்பம் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் சுவாமி, அம்மன் படங்கள், குங்குமம் ஆகியவற்றுக்கு வெளி மாநில பக்தா்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், இவை அதிகம் விற்பனையாகின்றன.
இந்நிலையில் நடை அடைக்கப்படும் நேரங்களில் பிரசாதங்களை வாங்க இயலவில்லை என்றும், இதனால், கோயிலுக்கு வெளியே பிரசாத விற்பனை நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதை ஏற்று கீழச்சித்திரை வீதியில் புது மண்டபம் அருகே கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாத விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும், பக்தா்கள் எவ்வித தடையுமின்றி பிரசாதத்தை வாங்கிச் செல்லலாம். இதனால், பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.