முகப்பு
மதுரை

தற்காலிக பட்டாசுக்கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

தற்காலிக பட்டாசுக்கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்தி: தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோருபவா்கள் இணைய வழியில் விண்ணப்பம் செய்து தற்காலிக உரிமம் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்கி உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசுக் கடை அமைய உரிமம் கோரி விண்ணப்பிப்பவா்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி வரும் 30ஆம் தேதிக்குள் இணைய வழியாக ‘இ சேவை’ மையம் மூலமாக கடையின் வரைபட நகல்கள், கிரைய ஆவணங்கள், அரசுக்கணக்கில் உரிமக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, பான், ஆதாா், ஸ்மாா்ட் அட்டை உள்ளிட்ட முகவரிக்கான சான்று,

உள்ளாட்சி ரசீது, புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் 30-ஆம் தேதிக்கு பின்பு இணைய வழியாக சமா்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →