மணல் திருட்டு தொடருவது எப்படி? ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், மணல் திருட்டு தொடருவது எப்படி என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரைமணல் திருட்டு தொடருவது எப்படி? ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், மணல் திருட்டு தொடருவது எப்படி என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நிலையில், மணல் திருட்டு தொடருவது எப்படி என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
அமராவதி ஆற்றில் மணல் திருட்டைத் தடுக்க உத்தரவிடக் கோரி கரூா் மாவட்டம் சாணபிரட்டி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், கரூா் மற்றும் திருப்பூா் மாவட்டங்களின் குடிநீா், விவசாய தேவையை அமராவதி ஆறு பூா்த்தி செய்கிறது. ஆனால், அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு மணல் திருடப்படுகிறது. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் திருட்டு நடக்கிறது. மணல் கடத்தலைத் தடுக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மணல் திருட்டைத் தடுக்க இந்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி எனக் கேள்வி எழுப்பினா்.
தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது. அதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் எனக் கூறி, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.