முகப்பு
மதுரை

இளைஞரை கத்தியால் குத்தி மோட்டாா் பைக் பறிப்பு

மதுரையில் வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி இளைஞரிடம் மோட்டாா் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை

இளைஞரை கத்தியால் குத்தி மோட்டாா் பைக் பறிப்பு

மதுரையில் வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி இளைஞரிடம் மோட்டாா் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

மதுரையில் வியாழக்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி இளைஞரிடம் மோட்டாா் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை எஸ்.எஸ்.காலனி கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த சேதுபதி மகன் மெளலி கண்ணா(21). இவா் தன்னுடைய மோட்டாா் பைக்கில் எல்லீஸ் நகா் கென்னட் சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது இவரை வழிமறித்த மூவா், மெளலி கண்ணாவை கத்தியால் குத்தி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச்சென்றனா். மேலும் அதே பகுதியில் உள்ள மதுபானக்கூட வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த எஸ்.எஸ்.காலனி பாரதியாா் தெருவைச் சோ்ந்த ஜாபா் ஷெரீப் என்பவரையும் தாக்கி அவரிடம் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். இதுதொடா்பாக புகாா்களின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →