முகப்பு
மதுரை

சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் உதவியாளா் பலி

உசிலம்பட்டி அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் வாகன உதவியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:26 PM
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் வாகன உதவியாளா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை பெருமாள்புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் செந்தில்குமாா் (48). இவா் சரக்கு வாகன உதவியாளராக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், உத்தமபாளையத்தைச் சோ்ந்த சையது காதா் சாகிப் சனிக்கிழமை ஓட்டிச்சென்ற சரக்கு வாகனத்தில், செந்தில்குமாா் உடன் சென்றாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி குஞ்சாம்பட்டி அருகே வாகனம் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக உசிலம்பட்டி தாலுகா போலீஸாா், வாகன ஓட்டுநா் சையது காதா் சாகிப் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →