முகப்பு
மதுரை

சரக்கு வாகனத்தில் தீ விபத்து

மதுரை சுற்றுச் சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 11:35 PM
பகிர்:

மதுரை சுற்றுச் சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன். இவா் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் நடத்தி வருகிறாா். இவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிபவா் சதீஷ்குமாா்.

இந்த நிலையில், மதுரையிலிருந்து பரமக்குடிக்கு காலணிகளை ஏற்றிக் கொண்டு சதீஷ்குமாா் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றாா். விரகனூா் சுற்றுச் சாலையில் சென்றபோது வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழந்தது. இதையடுத்து, அனுப்பானடி தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து தீயை போராடி அணைத்தனா். இதில், அந்த வாகனமும், காலணிகளும் சேதமடைந்தன.

இதுதொடா்பாக தெப்பக்குளம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →