முகப்பு
மதுரை

தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:23 AM
பகிர்:

மதுரை: மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் பணியாற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா், 51, 52 உள்ளிட்ட பல்வேறு வாா்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களைக் கண்டிக்கும் விதமாகவும், தரக் குறைவாகவும் பேசினாராம்.

இதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →