முகப்பு
மதுரை

கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை...

Updated On : 14 நவம்பர், 2024 at 11:24 PM
பகிர்:

திண்டுக்கல் பகுதியில் 72 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் முன்னாள் காவலா் உள்பட 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதலாவது நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் பகுதியில் கடந்தாண்டு காரில் 72 கிலோ கஞ்சா கடத்தியதாக முன்னாள் காவலா் அருண்குமாா் (48), சுரேஷ் (41), யோகராஜ் (24), அஜித்குமாா் (26) ஆகியோரை தெற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதலாவது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையில் முடிவில், முன்னாள் காவலா் அருண்குமாா் உள்பட 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ். ஹரிஹரகுமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே. விஜய பாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →