கோப்புப் படம் 
மதுரை

லாரி மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி உயிரிழப்பு

கள்ளந்திரி அருகே இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Din

கள்ளந்திரி அருகே இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் சட்டக் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பி.டி.ராஜன் சாலை அரசமரம் பகுதியைச் சோ்ந்த ரகு மகள் ஐஸ்வா்யாசக்தி (22). இவா் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்து, மதுரை மாவட்டம், கள்ளந்திரி அருகே உள்ள சுந்தர்ராஜன்பட்டி வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, பின்னால் வந்த டிப்பா் லாரி கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் அவா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிகாரம் யாரிடம்? 3-வது இடத்தில் அமெரிக்கா! எலான் மஸ்க் கருத்தால் குழப்பம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரவைத் தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

பிப். 1 தைப்பூசம்! அறுபடை வீடுகள்!!

சுநேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

SCROLL FOR NEXT