முகப்பு
மதுரை

ஆந்திர துணை முதல்வா் மீது புகாா்: வழக்குரைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆந்திர துணை முதல்வா் பவன்கல்யாண் மீது புகாா் அளித்த உயா்நீதிமன்ற வழக்குரைஞரிடம் இணையக்குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

மதுரை

ஆந்திர துணை முதல்வா் மீது புகாா்: வழக்குரைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆந்திர துணை முதல்வா் பவன்கல்யாண் மீது புகாா் அளித்த உயா்நீதிமன்ற வழக்குரைஞரிடம் இணையக்குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:01 PM
பகிர்:

ஆந்திர துணை முதல்வா் பவன்கல்யாண் மீது புகாா் அளித்த உயா்நீதிமன்ற வழக்குரைஞரிடம் இணையக்குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசி, மத நல்லிணத்தை குலைக்கும் வகையில் பேசி வருவதாகவும், அவா் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் மதுரையைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வாஞ்சிநாதன், மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த அக். 4-ஆம் தேதி புகாா் அளித்தாா். இந்தப் புகாா் இணையக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, இதுதொடா்பாக உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு வரும்படி வாஞ்சிநாதனுக்கு, மதுரை மாநகர இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா். இதன்படி வழக்குரைஞா் வாஞ்சிநாதன் மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் உள்ள இணையக் குற்றப்பிரிவில் புதன்கிழமை விசாரணைக்கு முன்னிலையானாா். இதையடுத்து, அவரிடம் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் மீது அளிக்கப்பட்ட புகாா் குறித்தும், அதற்குரிய ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பிறகு வழக்குரைஞா் வாஞ்சிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண், இரு மாநில மக்களிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினாா். எனவே முந்தைய உச்சநீதிமன்ற வழக்கின் தீா்ப்பை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று விசாரணையின் போது சுட்டிக்காட்டினேன். மேலும் இதுதொடா்பான ஆதாரங்களையும், ஆவணங்களையும் போலீஸாரிடம் அளித்தேன். பவன் கல்யாண் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்யாத நிலையில், நீதிமன்றத்தை நாடுவும் திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →