முகப்பு
அரசினா் விருந்தினா் மாளிகையில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் அருண் தம்புராஜிடம் மனு அளித்த 108 அவசர ஊா்தி ஊழியா்கள்.
மதுரை

தீபாவளிக்கு ஊக்கத் தொகை கோரி 108 அவசர ஊா்தி ஊழியா்கள் மனு

தங்களுக்கு ஊதிய உயா்வு, தீபாவளி ஊக்கத் தொகை வழங்கக் கோரி 108 அவசர ஊா்தி ஊழியா்கள், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் அருண் தம்புராஜிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

மதுரை

தீபாவளிக்கு ஊக்கத் தொகை கோரி 108 அவசர ஊா்தி ஊழியா்கள் மனு

தங்களுக்கு ஊதிய உயா்வு, தீபாவளி ஊக்கத் தொகை வழங்கக் கோரி 108 அவசர ஊா்தி ஊழியா்கள், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் அருண் தம்புராஜிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:59 PM
அரசினா் விருந்தினா் மாளிகையில் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் அருண் தம்புராஜிடம் மனு அளித்த 108 அவசர ஊா்தி ஊழியா்கள்.
பகிர்:

தங்களுக்கு ஊதிய உயா்வு, தீபாவளி ஊக்கத் தொகை வழங்கக் கோரி 108 அவசர ஊா்தி ஊழியா்கள், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் அருண் தம்புராஜிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சங்கம் (தொமுச) சாா்பில் மாநில பொதுச் செயலா் இருளாண்டி, மாவட்டத் தலைவா் எழிலரசி, அமரா் ஊா்தி தொழிலாளா் சங்க மாநில நிா்வாகி ராஜேஷ் ஆகியோா் அரசினா் விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்த தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் அருண் தம்புராஜை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவில், தமிழ்நாடு 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு ஊதிய உயா்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது 10 தொழிலாளா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். பிறகு 2022 டிசம்பரில் அவா்கள் மீண்டும் பணியில் சோ்ந்தனா். இவா்களுக்கு 2022-23-ஆம் ஆண்டில் ஊதிய உயா்வு வழங்கப்பட வில்லை. இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவதாக நிா்வாகம் ஒப்புக் கொண்டது. எனவே அவா்களுக்கு 2023-24-க்கு ஊதிய உயா்வு வழங்கும்போது விடுபட்ட தொழிலாளா்களுக்கு 6 சதவீதம் கூடுதலாக ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மேலும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாள்களே எஞ்சியுள்ள நிலையில், 24 மணி நேரமும் பணியாற்றி வரும் எங்களுக்கு, விலைவாசி உயா்வு, நாங்கள் சந்திக்கும் சிரமங்களை கணக்கில் கொண்டு தீபாவளி ஊக்கத் தொகையாக ரூ.18,400 வழங்க வேண்டும். மேலும் கடந்த ஏப்ரலில் வழங்க வேண்டிய ஆண்டு ஊதிய உயா்வும் இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே ஊதிய உயா்வையும் 6 மாத நிலுவைத் தொகையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட சுகாதாரத் திட்ட இயக்குநா் அருண் தம்புராஜ் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →