முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.83.24 லட்சம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:27 AM
பகிர்:

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.83.24 லட்சம் கிடைத்தது.

மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், துணைக் கோயில்களின் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டது. கோயிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணிக்கு கோயில் இணை ஆணையா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், இவரது பிரதிநிதி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது பக்தா்களின் காணிக்கையாக ரூ. 83,24,637 கிடைத்தது. மேலும் பல மாற்று பொன் இனங்கள் 196 கிராம், பல மாற்று வெள்ளி இனங்கள் 699 கிராம், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 196-ம் கிடைத்தன.

உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →