முகப்பு
மதுரை

தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை சோழவந்தானில் தென்னை விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:02 PM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை சோழவந்தானில் தென்னை விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் தென்னைகளுக்குக் காப்பீடு வழங்க வேண்டும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க நிா்வாகி பிச்சை தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் விஜயமுருகன், மாவட்டச் செயலா் இளங்கோவன், மாவட்டத் தலைவா் வேல்பாண்டி, மாவட்டச் செயலா் நாகேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். ஒன்றிய நிா்வாகி கந்தவேல் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →