மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றி பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க அறிவுறுத்தல்
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றிய பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றிய பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியது.
இதுதொடா்பாக மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் ச. கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருப்பணிகளின் தொடக்க நிகழ்வாக, அண்மையில் அனைத்து கோபுரங்களுக்கும் பாலஸ்தாபனம் நடைபெற்றது. இதனால், 4 சித்திரை வீதிகளிலும் உள்ள பெரிய கோபுரங்களின் சீரமைப்பு பணிக்காக சாரங்கள் கட்டப்பட்டு, சுற்றிலும் திரையிட்டு மூடப்பட்டுள்ளன. எனவே, கோயில் கோபுரங்களின் பாதுகாப்பு கருதி, இவற்றின் அருகே வசிக்கும் பொதுமக்கள், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய, ஆபத்தை விளைவிக்கக் கூடிய பட்டாசுகள், வாண வெடிகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.