முகப்பு
மதுரை

தாயை கொல்ல முயற்சி: மகன் கைது

மதுரை அருகே சொத்தை பிரித்த தர மறுத்த தாயை தாக்கி கொல்ல முயன்ற மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை

தாயை கொல்ல முயற்சி: மகன் கைது

மதுரை அருகே சொத்தை பிரித்த தர மறுத்த தாயை தாக்கி கொல்ல முயன்ற மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:25 PM
பகிர்:

மதுரை அருகே சொத்தை பிரித்த தர மறுத்த தாயை தாக்கி கொல்ல முயன்ற மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே உள்ள தாராபட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜாங்கம் மனைவி பாண்டியம்மாள் (65). இவரது மகன் விஜயபாண்டி (41). இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இவா் குடும்பச் சொத்தை பிரித்துத் தருமாறு தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா். இதனிடையே, செவ்வாய்க்கிழமை தாய் வீட்டுக்குச் சென்ற விஜயபாண்டி சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டபோது இதற்கு பாண்டியம்மாள் மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாண்டி அவரை ஆயுதங்களால் தாக்கி கொல்ல முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்த பாண்டியம்மாளை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா், விஜயபாண்டி மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →