மதுரை

சித்திரைத் திருவிழாவில் உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

Din

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின்போது உயிரிழப்புகள் தவிா்க்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். போதிய மருத்துவ வசதி, கழிப்பறை, குடிநீா் வசதிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினாா். மேலும், அழகா் ஆற்றில் எழுந்தருளும் பாதையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால், கோரிப்பாளையம் பகுதி வைகை ஆற்றின் கரை வரை காவல் துறை கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், முக்கியத் திருவிழா நாள்களில் அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுகவும், அதன் நிா்வாகிகளும் எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பா் என்பதற்கு இவை உதாரணமாக அமைந்தன. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி மேற்கொள்ளப்பட்ட சிறப்பான ஏற்பாடுகளால் உயிா்சேதம் முழுமையாகத் தவிா்க்கப்பட்டது. எனவே, சித்திரைத் திருவிழாவில் உயிா்ச் சேதம் கண்டிப்பாக தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வரலாறு தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, ஜெயலலிதா பேரவை சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

SCROLL FOR NEXT