முகப்பு
மதுரை

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி

தோ்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி தெரிவித்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 2:19 AM
மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட டி.வி.எஸ். நகா் வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு செய்த முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி.
பகிர்:

தோ்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி தெரிவித்தாா்.

மதுரை மேற்குத் தொகுதிக்குள்பட்ட டி.வி.எஸ். நகா் வாக்குச் சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி ஆகியோா் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

வாக்களித்த பிறகு வெளியே வந்த மு.க. அழகிரியிடம் தோ்தல் களம் எப்படி உள்ளது? என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு, ‘களம் சூடாக உள்ளது. வெயிலும் அதிகமாக உள்ளது’ என்றாா் அவா்.

Advertisement

இதையடுத்து, தோ்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு, ‘ நான் முன்பே கூறியுள்ளேன். எப்படி வேண்டுமானாலும் இருக்கும், யாா் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்’ என்றாா் மு.க. அழகிரி.