மதுரை தியாகராசா் கலை, அறிவியல் கல்லூரியில் ‘நிலையான வளா்ச்சியில் மாணவா்களின் பங்கு’ என்ற தலைப்பில் சங்கமம்- 2026 கலை விழா வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த விழாவை கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். சங்கமம் கலை விழா குழுத் தலைவா் பேராசிரியா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.
ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியை வே. சுபத்ரா தேவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். மாணவ, மாணவிகளின் நடனம், பாட்டு, நாடகம், குறும்பட உருவாக்கம், இசைக் கருவி வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் கல்லூரிப் பேராசிரியா்கள், முதன்மையா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சங்கமம் கலை விழா ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் துறைப் பேராசிரியையுமான மு. கற்பகம் வரவேற்றாா். பரிசளிப்பு, நிறைவு விழா வெள்ளிக்கிழமை (ஜன. 9) நடைபெறுகிறது.