ராமநாதபுரம் சந்தைத் திடலில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டதுக்கு, தமுமுக மாவட்டப் பொறுப்புக் குழுத் தலைவர் பரக்கத்துல்லாஹ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் (மேற்கு) பாஹிர்அலி முன்னிலை வகித்தார். கோரிக்கைளை விளக்கி மாநில அமைப்புச் செயலர் கௌஷ்பாட்சா பேசினார். மியான்மரில் முஸ்லிம்கள் தாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். மியான்மர் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம்களை வெளியேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.