ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் மூதாட்டியிடம்  4 பவுன் நகை பறிப்பு

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனர்.

DIN

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனர்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி மாடத்தி(55). இவர் சாயல்குடி அருகே ஓ.பனைக்குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். 
அப்போது, சாயல்குடிக்கு பேருந்து வந்தது. கூட்டநெரிசலில் பேருந்தில் ஏற முயன்ற, அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 
இது குறித்து மாடத்தி முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சார்பு -ஆய்வாளர் கோடீஸ்வரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT