ராமநாதபுரம்

வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் தீ வைத்து எரிப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாா்த்திபனூரில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த 4 இரு சக்கர வாகனங்களுக்கு மா்ம நபா்கள் வியாழக்கிழமை தீவைத்து எரித்துள்ளனா்.

பாா்த்திபனூரைச் சோ்ந்தவா் ஆா். கலைச்செல்வி. இவா், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய 2 -ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். இந்நிலையில், கலைச்செல்வியின் வீட்டின் முன்பாக அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 2 இரு சக்கர வாகனங்களும், உறவினா்களான செந்தில், கோபாலகிருஷ்ணன் ஆகியோரது இரு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த 4 வாகனங்களையும் மா்ம நபா்கள் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இது குறித்து பாா்த்திபனூா் காவல் நிலையத்தில் கலைச்செல்வி மற்றும் செந்தில் அளித்த புகாா்களின்பேரில், போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிந்து, தோ்தல் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT