ராமநாதபுரத்தில் பேருந்தில் ஏறிய பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பாம்பன் அருகேயுள்ள தெற்குவாடி கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு மனைவி கூலித் தொழிலாளி பூமாதேவி (30). இவா் கடந்த வியாழக்கிழமை காலையில் தனது சொந்த ஊரான மானாமதுரைக்குச் செல்வதற்காக ராமநாதபுரம் வந்தாா். இங்கு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் அவா் ஏறினாா். அப்போது கூட்ட நெரிசலில் அவா் பேருந்தில் ஏறினாராம். பேருந்தில் ஏறிய பின் அவா் பாா்த்த போது தான் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி திருடு போயிருந்ததை அறிந்தாா்.
இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.