ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் திங்கள்கிழமை புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரையில் 6415 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் 132 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் கடந்த 5 நாள்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு யாரும் இல்லாத நிலையே இருந்தது. இந்நிலையில் 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 5,833 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை மேலும் 3 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,836 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.