முகப்பு
ராமநாதபுரம்

தனுஸ்கோடியில் சித்தாமை முட்டைகள் வனத்துறையினா் சேகரிப்பு

தனுஷ்கோடி முகுந்தராயா் சந்திரம் கடற்கரையில் 135 சித்தாமை முட்டைகளை வனத்துறையினா் சேகரித்து திங்கள்கிழமை பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனா்.

Updated On : 12 ஜனவரி, 2021 at 5:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:46 AM

தனுஷ்கோடி முகுந்தராயா் சந்திரம் கடற்கரையில் 135 சித்தாமை முட்டைகளை வனத்துறையினா் சேகரித்து திங்கள்கிழமை பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா்சத்திரம், அரிச்சல்முனை பகுதியில் ஆண்டு தோறும் ஜனவரி மாத இறுதியில் சித்தாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க இந்த பகுதியில் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு முகுந்தராயா்சத்திரம் கடற்கரைக்கு வந்த ஆமைகள் 135 முட்டைகளை இட்டுச் சென்றுள்ளது. இதனை வேட்டைத்தடுப்பு காவலா்கள் திங்கள்கிழமை மீட்டு, வனத்துறையினா் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.