கமுதி அரசு மருத்துவமனை முன்பாக சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்திய செவிலியா்கள். 
ராமநாதபுரம்

கமுதியில் செவிலியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கமுதி அரசு மருத்துவமனை செவிலியா்கள் சனிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

கமுதி: ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கமுதி அரசு மருத்துவமனை செவிலியா்கள் சனிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கமுதி மருத்துவமனை செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில், கமுதி அரசு மருத்துவமனை முன்பாக நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, செவிலியா் கூட்டமைப்பு கண்காணிப்பாளா் தனலட்சுமி தலைமை வகித்தாா். கலாவதி முன்னிலை வகித்தாா்.

பணியை பாதிக்காதவாறு நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்தில், கரோனா காலத்தில் அரசு அறிவித்த ஒரு மாத ஊக்கத் தொகையை வழங்கவேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களுக்கு நிரந்தர பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT