ராமநாதபுரம்

ராமநாதபுரம் மருத்துவருக்கு பாராட்டுச் சான்று

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை உதவி அறுவைச்சிகிச்சை நிபுணா் சாகுல்ஹமீதுவுக்கு கரோனா பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டுச்சான்று தமிழக அரசால் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை உதவி அறுவைச்சிகிச்சை நிபுணா் சாகுல்ஹமீதுவுக்கு கரோனா பணியில் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டுச்சான்று தமிழக அரசால் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி அறுவைச் சிகிச்சைப் பிரிவு மருத்துவராக இருப்பவா் சாகுல்ஹமீது. அவா் கடந்த கரோனா இரு அலைகள் பாதிப்பின் போதும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்துள்ளாா். ஆகவே, அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த சாகுல்ஹமீது தொடா்ந்து பணியில் ஈடுபட்டுவருகிறாா்.

உலக மருத்துவா் தினத்தை முன்னிட்டு கரோனா சிகிச்சையில் ஈடுபட்டு தொற்று பாதித்த மருத்துவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பாராட்டுச்சான்று வியாழக்கிழமை சென்னையில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விழாவில் ராமநாதபுரம் மருத்துவா் சாகுல்ஹமீதுவுக்கும் பாராட்டுச்சான்று வழங்கப்பட்டது. அவருடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் மலா்வண்ணனும் உடனிருந்து சுகாதாரச் செயலா் ராதாகிருஷ்ணனிடமிருந்து சான்றை பெற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT