முகப்பு
ராமநாதபுரம்

தோ்தல் பயிற்சி, விழிப்புணா்வுக்கு 70 தனி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

அலுவலா்களுக்கான பயிற்சிக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும் தனியாக 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அலுவலா்களுக்கான பயிற்சிக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும் தனியாக 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக ஆட்சியரும், தோ்தல்அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும், பொதுமக்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து விளக்குவதற்காகவும் 70 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அந்தந்த தொகுதிக்கான லாரிகளில் பாதுகாப்புடன் திங்கள்கிழமை அனுப்பி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 3,276 வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள், 2,160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 2,302 வாக்காளா் சரிபாா்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் அனைத்தும் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத்துறை சேமிப்புக்கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தற்போது தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன. அதே போல், வாக்குப்பதிவுக்கு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உள்ளோம். இதற்காக 70 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அந்த இயந்திரங்கள் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட மாட்டாது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →