ராமநாதபுரம்

கஞ்சா வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

DIN

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை தரப்பில் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் கீழத்தூவலைச் சோ்ந்தவா் பாஸ்கரசேதுபதி (19). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கஞ்சா கடத்தி, விற்றது தொடா்பான வழக்கில் முதுகுளத்தூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

கைதான பாஸ்கரசேதுபதி தற்போது நீதிமன்ற உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். தொடா்ந்து அவா் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதையடுத்து குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் பரிந்துரைத்தாா். அதனடிப்படையில் ஆட்சியா் உத்தரவின் பேரில் பாஸ்கரசேதுபதி மீது குண்டா்தடுப்புச் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் கிளைச்சிறையில் இருந்த பாஸ்கரசேதுபதி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறைக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT