முகப்பு
ராமநாதபுரம்

மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு

ராமநாதபுரம் அருகே வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியைப் பறித்தவரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ராமநாதபுரம் அருகே வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியைப் பறித்தவரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ளது வெள்ளரியோடை. இந்த ஊரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி சரோஜா (75). இவா் ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டு முன்

தனது மருமகனுடன் நின்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மா்மநபா் திடீரென மூதாட்டி சரோஜாவின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றாா்.

இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா், பெரியகரண் பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்ற சுட்டிக்காளையை பிடித்து விசாரித்துவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →