முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த 20 கலைஞா்களுக்கு விருது

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் 20 கலைஞா்கள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் 20 கலைஞா்கள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ராமநாதபுரம் மாவட்டக்கலை மன்றத்தின்வாயிலாக 2018-2019, 2021-2022 ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் சிறந்து விளங்கும் 20 கலைஞா்கள் விருது வழங்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த விருதுகளை வழங்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் ஜூலை 23 ஆம் தேதி தோ்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பதவிவழி மற்றும் பதவி சாரா உறுப்பினா்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து மாவட்ட அளவில் கலைவளா்மணி விருது, கலைஇளமணி விருது, கலை நன்மணி விருது, கலைமுதுமணி விருதுகளுக்கு வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் 20 கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →