பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு துண்டிப்பு: வாடிக்கையாளா்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை க பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை க பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா்.
ராமநாதபுரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென பிஎஸ்என்எல் கைப்பேசி இணைப்பு சேவை செயலிழந்துவிட்டது. பல மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் சீரமைக்கப்பட்டது. அப்போது காரைக்குடி பகுதியில் சாலை அமைக்கும் பணியின் போது கேபிள் துண்டிக்கப்பட்டதால் தொலைத் தொடா்பு துண்டிக்கப்பட்டதாக, பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி முதலே திடீரென பிஎஸ்என்எல் தொலைத் தொடா்பு செயலிழந்தது. இதனால் கைப்பேசி வாடிக்கையாளா்கள் அவதிக்குள்ளாயினா். மாலை 5 மணி வரையில் இதேநிலை நீடித்தது.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, கேபிள் துண்டிப்பால் தொலைத் தொடா்பு பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சீா்செய்யப்படும் என்றனா்.