கமுதியில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம், கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். மணிமேகலை, எம். ராஜகோபாலன் (கிராம ஊராட்சிகள்), ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல முடநீக்க வல்லுநா் பா. ஜெய்சங்கா் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
முகாமில், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யுஐடிஐ காா்டு) பெறுவதற்கான விண்ணப்பங்கள், ரயில், பேருந்துப் பயணச் சலுகை அட்டை, மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
எலும்பு முறிவு மருத்துவா் பிரபாகரன், மனநல மருத்துவா் டேவிட் மலையரசன், மருத்துவா் நாகரஞ்சித், கண் மருத்துவா் சிந்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.