ராமநாதபுரம்

கமுதி அருகே தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் பொதுமக்கள்

DIN

வைகை அணையில் தண்ணீா் திறக்கப்பட்டதையடுத்து, கமுதி அருகே தரைப் பாலம் வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், 5 கிராம மக்கள் கயிறு கட்டி ஆற்றைக் கடக்கின்றனா்.

வைகை அணையிலிருந்து ஆற்றில் 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூா் மதகிலிருந்து 4,500 கன அடி வீதம் ராமநாதபுரம் பெரியகண்மாய், கமுதி பகுதியில் உள்ள பரளையாற்றில் தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனால், கமுதி அருகே செய்யாமங்கலம் கிராமத்துக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள தரைப் பாலம் வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது. செய்யாமங்கலம், தாதனேந்தல், பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் ஆகிய 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதையடுத்து, ஆற்றைக் கடக்க தரைப் பாலத்தின் இருபுறங்களிலும் கயிறு கட்டப்பட்டது. வேலைக்குச் செல்வோா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT