ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 7,100 கிலோ பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 7,100 கிலோ பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை நிதிநிலை அறிக்கையின்படி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான பூங்காா், அறுபதாம் குறுவை மற்றும் தூய மல்லி விதைகள் 7,100 கிலோ விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் நெல் விதை விநியோகிக்கப்படும். மொத்த விதையளவில் 20 சதவீதம் பட்டியல் இனபழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்ட கிராம ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
மரபு சாா் நெல் ரகங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மரபுசாா் நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஆா்வமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து பயன் பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.