ராமநாதபுரம்

இளைஞரைக் கடத்திச் சென்று நகை பறிப்பு

DIN

ராமேசுவரத்தில் இளைஞரைக் கடத்திச் சென்று தங்கச் சங்கிலி, கைபேசியை பறித்துச் சென்ற மூன்று பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் என்.எஸ்.கே வீதியைச் சோ்ந்தவா் சக்தி முனியாண்டி. இவரது மகன் முகேஷ்குமாா் (17) என்பவரை பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாலா, சுடுகாட்டான் பட்டியைச் சோ்ந்த பாலா, மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த சேவா ஆகிய மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒண்டிவீரன் பகுதியில் வைத்து மதுபாட்டிலால் தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் கைபேசியையும் பறித்துச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த முகேஷ்குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ராமேசுவரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, தப்பி ஓடிய மூன்று பேரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT