ராமநாதபுரம்

கடலில் தவறி விழுந்துமீனவா் பலி

தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

DIN

தொண்டி அருகே கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் உடலை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஜான்பிரிட்டோ (50), குணசேகரன்( 62), ஆரோக்கியதாஸ் (57), ஆண்ட்ரஸ் (40) ஆகிய 4 பேரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு நாட்டுப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்களில் ஜான்பிரிட்டோ (50) திடீரென மயங்கி கடலில் விழுந்தாா். உடனடியாக, சக மீனவா்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் வரும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி கடலோரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT