ராமநாதபுரம்

வாகனம் மோதி புள்ளிமான் பலி

திருவாடானையில் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனம் மோதியதில் ஆண் புள்ளிமான் உயிரிழந்தது.

DIN

திருவாடானையில் வியாழக்கிழமை நள்ளிரவு வாகனம் மோதியதில் ஆண் புள்ளிமான் உயிரிழந்தது.

திருவாடானை மூன்று கண் பாலம் அருகே மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆண் புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினா் மானின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்குப் பிறகு அடக்கம் செய்தனா். சுமாா் 20 கிலோ எடையுடன், பெரிய கொம்புகளையுடைய இந்த புள்ளிமானுக்கு 5 வயது இருக்கும்.

இந்த நிலையில், திருவாடானை மட்டுமல்லாது, அஞ்சுகோட்டை, மங்கலக்குடி, ஊரணிக்கோட்டை, ஆண்டாவூரணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புள்ளிமான்கள் அதிக அளவில் வசிப்பதால் அங்குள்ள சாலைப் பகுதிகளில் மான்கள் நடமாட்டம் குறித்த அறிவிப்பு பதாகைகளை வைக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT