ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
ராமநாதபுரம்ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை 320 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 7 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், 20-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசினா். இதனால், பல லட்சம் ரூபாய் இழப்புடன் மீனவா்கள் வியாழக்கிழமை காலை ராமேசுவரம் கரைக்கு திரும்பினா்.
இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், தமிழக மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் சுமுகமான நிலை ஏற்படும் என கருதப்பட்டது. இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்த சம்பவம் அவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.