ஓபிஎஸ் 
ராமநாதபுரம்

இரு மொழிக் கொள்கையே சரியானது

Din

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே சரியானது என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே சரியானது. தொகுதி வரைமுறை பற்றிய செய்தி வந்தவுடன் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சரியான விளக்கம் கொடுத்தாா். இருப்பினும் சிலா் அதை அரசியல் ஆக்குவதற்கு முயற்சி எடுத்து வருகின்றனா். 2026 சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னாள் மத்திய அமைச்சா் திருநாவுக்கரசு, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT