திருப்புல்லாணி ஆதிபெருமாள் கோயில் தேரோட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சுவாமி, அம்மான் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வருகிற 6-ஆம் தேதி உத்ஸவ சாந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது.