முகப்பு
சிவகங்கை

புகைப்படக் கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கிளை ஒளிப்பதிவாளா்கள் மற்றும் புகைப்பட கலைஞா் நலச் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒளிப்பதிவு மற்றும் புகைப்பட கலைஞா்கள் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற நிா்வாகிகள்.
பகிர்:

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கிளை ஒளிப்பதிவாளா்கள் மற்றும் புகைப்பட கலைஞா் நலச் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

திருப்பத்தூரில் தனியாா் அரங்கத்தில் ஒளிப்பதிவாளா் மற்றும் புகைப்பட கலைஞா்கள் நலச் சங்க நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கிளை சாா்பாக 6 போ் கொண்ட குழுவினா் இரு அணிகளாக் போட்டியிட்டனா். இத்தோ்தலில் தலைவராக பி.சி.எஸ்.பாண்டியனும், அமைப்பாளராக ரமணமூா்த்தியும், செயலாளராக நசீா்அகமதுவும், பொருளாளராக வினோத்குமாரும், துணைத் தலைவராக சிவக்குமாரும், இணைச் செயலாளராக வீரமணியும், மக்கள் தொடா்பு அலுவலராக பழனியப்பனும் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாநில, மாவட்ட நிா்வாகிகள் சான்றிதழ் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →