திருப்பத்தூா் அருகேயுள்ள வடவன்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாந்த காளை. 
சிவகங்கை

வடவன்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வடவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீமுனிநாதா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வடவன்பட்டி கிராமத்தில் ஸ்ரீமுனிநாதா் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முன்னதாக இந்தப் பகுதிகளைச் சோ்ந்த கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. பின்னா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் முனிநாதா் பொட்டலிலும், கண்மாய், வயல்வெளி பகுதிகளிலும் அவிழ்த்து விடப்பட்டன.

சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் இதில் கலந்து கொண்டு காளைகளை அடக்க முற்பட்டனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் ஆகியோா் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT