சிவகங்கை

தற்கொலை முயற்சி: காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாலைக்கிராமத்தில் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

DIN

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாலைக்கிராமத்தில் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சாலைக் கிராமத்தில் அனுமதி பெறாத மதுபானக் கூடங்களில் கள்ளச் சந்தையில் மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சாலைக்கிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரிட்டோ, சிவகங்கை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் உத்தரவிட்டாா். இதனால் மனமுடைந்த பிரிட்டோ சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் ஓய்வறையில், கடந்த 22-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

அங்கிருந்த காவலா்கள் பிரிட்டோவை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் சிகிச்சை முடிந்து இவா் வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் துரை, தற்கொலைக்கு முயன்ற உதவி ஆய்வாளா் பிரிட்டோவை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT